🚨வாக்குச்சீட்டை படம் எடுத்தவர் கைது!!!

காலி மாவட்ட, மித்தியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) காலை வாக்களிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *