Uncategorized

🚨எம்.பி. ஒருவர் இரு பிஸ்ரல்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது!!!

*📌பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நலன்கருதி, எம்.பி. ஒருவர் இரு பிஸ்ரல்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னரும் இரு துப்பாக்கிகளை உடைமையாக வைத்திருக்க முடியுமென்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.*

🚨எம்.பி. ஒருவர் இரு பிஸ்ரல்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது!!! Read More »

🚨பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினருக்கு அழைப்பு – ரணில்!!!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி இன்று (27) வெளியிட்டார்.நிர்வாக மாவட்டங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளூர் நீர்நிலைகளில் பொது ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

🚨பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினருக்கு அழைப்பு – ரணில்!!! Read More »

🚨நீர்கொழும்பில் Facebook குழு விருந்துபசாரத்தில் 43 பேர் கைது!!!

நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் குழு விருந்துபசாரத்தில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் பணிப்புரையின் பேரில், உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல்

🚨நீர்கொழும்பில் Facebook குழு விருந்துபசாரத்தில் 43 பேர் கைது!!! Read More »

🚨10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!!

*📌கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*

🚨10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!! Read More »

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது!!!

*📌ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. கொள்கைப் பிரகடனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.*

🚨ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது!!! Read More »

🚨ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!!

📌ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

🚨ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது!!! Read More »

📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்!!!

*📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.**இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.**வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

📌வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்!!! Read More »

🚨திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது!!!

திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டனர்.திருச்சியில் ஓய்வு பெற்ற நீதிஅரசர் கே.சந்துரு பேட்டி தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் தடை

🚨திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது!!! Read More »

🚨மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!!

*📌மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக புகையிரத நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.**இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன. மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.*

🚨மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!!! Read More »

🚨ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!!!

*📌ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.**ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.**எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.*

🚨ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!!! Read More »